பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு

சண்டிகர்: பஞ்​சாபில் மர்ம மரணமடைந்த மகன் வெளி​யிட்​டிருந்த சமூக வலை​தளப் பதி​வால், பெற்​றோர் மீது போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

பஞ்​சாப் மாநில முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​த​பா, முன்​னாள் அமைச்​சர் ரஸியா சுல்​தா​னா தம்பதியின் மகன் அகில் அக்​தர் (35). கடந்த அக்​டோபர் 16-ம் தேதி வீட்​டில் மர்மமான முறையில் உயி​ரிழந்​தார்.

அக்​தர் அதிக போதைப் பொருள் உட்​கொண்​ட​தால் இறந்​ததாக கூறப்​பட்​டது. ஆனால், அக்​தர் மரணத்​தில் சந்​தேகம் அடைந்த அவரது குடும்​பத்​துக்கு அறி​முக​மான சம்​சுதீன் சவுத்ரி, கடந்த ஆகஸ்ட் மாதம் சமூக வலை​தளத்​தில் அக்​தர் வெளி​யிட்​டிருந்த பதிவு​களை​ வெளி​யிட்​டார்.

அந்​தப் பதிவு​களில் அக்​தர் கூறும்​போது, ‘‘எனது தந்​தைக்​கும் எனது மனை​விக்​கும் கள்​ளத் தொடர்​புள்​ளது. இதனால் தினமும் நான் மன அழுத்​தத்​தில் இருக்​கிறேன். என் குடும்​பத்​தார் என்னை மிரட்​டு​கின்​றனர். இந்த விஷ​யத்​தில் என் தாய், சகோ​தரி​யும் உடந்​தை​யாக உள்​ளனர். இந்த விவரத்தை வெளி​யில் தெரி​வித்​தால் என் மீது பாலியல் வழக்கு தொடுப்​போம் என்​றும் கொலை செய்​வ​தாக​வும் மிரட்​டு​கின்​றனர். எனக்கு பைத்​தி​யம் பிடித்​த​தாக போலி​யாக கூறி மறு​வாழ்வு இல்​லத்​தில் சேர்க்க முயற்​சிக்​கின்​றனர். எனது உயிருக்கு என்ன ஆகுமோ என்று தெரிய​வில்​லை’’ என்று கூறி​யிருக்​கிறார்.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பஞ்​சாப் போலீ​ஸார், முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​தபா மற்​றும் அவரது மனை​வி ரஸியா சுல்​தா​னா, அவர்​களது மகள் மற்​றும் மரு​மகள் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதுகுறித்து பஞ்ச்​குலா போலீஸ் துணை கமிஷனர் ஸ்ருஷ்டி குப்தா கூறும்​போது, ‘‘அகில் அக்​தர் மரணம் குறித்து விசா​ரணை நடத்த சிறப்பு விசா​ரணை குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. பாரபட்​சமற்ற விசா​ரணை நடத்தி குற்​ற​வாளி​கள் யாராக இருந்​தா​லும் தண்​டனை பெற்று தரு​வோம்’’ என்​றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.