5 ஆண்டுகள் தண்டனை; சிறையில் அடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் அதிபர்

பாரிஸ்,

2007ம் ஆண்டு முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக செயல்பட்டவர் நிகோலஸ் சர்கோஸி (வயது 70). இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லிபியா முன்னாள் அதிபர் கடாபியிடம் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்குமுன் தீர்ப்பு வெளியானது. அதில், நிகோலஸ் சார்கோஸி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நிகோலஸ் சர்கோஸி இன்று சிறையில் அடைக்கபப்ட்டார். அவர் பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக நிகோலஸ் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நிகோலஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.