புதிய கட்சி தொடங்க கவிதா திட்டம்

ஹைத​ரா​பாத்: பிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்​திரசேகர ராவின் மகளும் தெலங்கானா மேலவை (எம்​எல்​சி) உறுப்​பினரு​மான கவி​தா,
கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், யாதகிரி குட்டா பகு​தி​யில் உள்ள பிரசித்தி பெற்ற லட்​சுமி நரசிம்​மர் கோயி​லில் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தெலங்​கானா ஜாக்​ருதி எனும் அமைப்பு சமூக அக்​கறை கொண்ட ஓர் அமைப்​பாக விளங்கி வரு​கிறது. இதன் தலை​வ​ராக நான் இருக்​கிறேன். தேவைப்​பட்​டால் இந்த அமைப்பு கட்​சி​யாக கூட மாறும் வாய்ப்பு உள்​ளது. மக்​களுக்கு தேவையென்​றால் புதிய கட்​சியை தொடங்க தயங்க மாட்​டேன். வரும் 25-ம் தேதி முதல் மக்​களுக்​கான பாதை (ஜனம் பாட்​டா) எனும் நிகழ்ச்​சியை தொடங்​கு​வேன்.

4 மாதங்​கள் வரை சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​வேன். மக்​களின் பிரச்​சினை​களை அறிய உள்​ளேன்​. இது வெற்​றியடைய வேண்​டி லட்​சுமி நரசிம்​மரை தரிசித்​தேன்​. இவ்​​வாறு கவி​தா பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.