கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. முன்​ன​தாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழு​விடம், கரூர் டவுன் போலீ​ஸார் மற்​றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் ஆவணங்​களை ஒப்​படைத்​தனர்.

இதையடுத்​து, சிபிஐ குழு​வைச் சேர்ந்த ஆய்​வாளர் மனோகரன், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 2-ல் நீதிபதி சார்​லஸ் ஆல்​பர்ட் முன்​னிலை​யில் முதல்தகவல் அறிக்​கையை கடந்த 22-ம் தேதி தாக்​கல் செய்​தார். அதில், கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் மற்​றும் தவெக​வினர் பலர் என குறிப்​பிட்​டு, விசா​ரணை​யைத் தொடர உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 1-ல் சிபிஐ தாக்​கல் செய்​துள்ள எஃப்​ஐஆரின் நகலைக் கேட்டு தவெக வழக்​கறிஞர்​கள் நேற்று மனு தாக்​கல் செய்​தனர். இதையடுத்​து, சிபிஐ தாக்​கல் செய்த எஃப்​ஐஆரின் நகல் அவர்​களிடம் வழங்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.