புரோ கபடி லீக் ‘பிளே-ஆப்’: அரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி

புதுடெல்லி,

12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற 12 அணிகளும் தலா 18 ஆட்டங்களில் ஆடின. லீக் சுற்று முடிவில் முதல் 8 இடங்களை பிடித்த புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் ‘பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின. உ.பி. யோத்தாஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரின் பிளே-ஆப் சுற்று டெல்லியில் தொடங்கியது.

புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியை தழுவும் அணி, வெளியேற்றுதல் சுற்று மூலம் ஏற்றம் காணும் அணியை 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் ல் அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை (இரவு 8 மணி) சந்தித்தது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி 30-27 என்ற கணக்கில் வெற்றி பெற்றது .

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.