பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

ராமநாதபுரம் / மதுரை: பசும்​பொன்​னில் வரும் 30-ம் தேதி நடை​பெறும் தேவர் குரு பூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பங்​கேற்​கிறார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் வரும் 28 முதல் 30-ம் தேதி வரை முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குரு பூஜை மற்​றும் 118-வது ஜெயந்தி விழா நடை​பெற உள்​ளது. வரும் 30-ம் தேதி அரசு சார்​பில் நடை​பெறும் விழா​வில் காலை 9 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள் பங்​கேற்று மரி​யாதை செலுத்த உள்​ளனர்.

தொடர்ந்​து, காலை 10 மணிக்கு குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பங்​கேற்று மரி​யாதை செலுத்த உள்​ளார். தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​திய பிறகு, தேவர் வாழ்ந்த வீட்​டைப் பார்​வை​யிடு​வதுடன், தேவர் நினை​வாலய அறங்​காவலர் காந்​தி​மீ​னாள் நடராஜனை சந்​தித்து நலம் விசா​ரிக்க உள்​ளார். குடியரசு துணைத் தலை​வருடன் மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு மரி​யாதை செலுத்த உள்​ளனர்.

குடியரசு துணைத் தலை​வர் வரு​கையை முன்​னிட்டு பசும்​பொன்​னில் உள்ள ஹெலிபேட் தளத்தை புதுப்​பிக்​க​வும், விரிவுபடுத்​த​வும் மாவட்ட நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இந்​நிலை​யில், பாது​காப்பு முன்​னேற்​பாடு​கள் குறித்து மாவட்ட ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன் தலை​மை​யில் நேற்று ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஜி.சந்​தீஷ் மற்​றும் பல்​வேறு துறை அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.

ரத்​தத்​தில் கையெழுத்து இயக்​கம்: பசும்​பொன்​னில் நடை​பெற உள்ள தேவர் குருபூஜை விழா​வில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்க உள்​ளார். இது தொடர்பாக மதுரை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​துக்​கு, சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் துணைத் தலை​வர் ஆர்​.பி.உதயகு​மார் தலைமை வகித்​தார். இதில், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் சரவணன், மகேந்​திரன், மாணிக்​கம், ஜெயலலிதா பேரவை நிர்​வாகி​கள் வெற்​றிவேல், தனராஜன், ராஜேஷ் கண்ணா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். அப்​போது, குருபூஜையில் பழனி​சாமிபங்கேற்க அழைப்பு விடுத்து ரத்​தத்​தில் கையெழுத்​திடும் இயக்​கத்தை ஆர்​.பி.உதயகு​மார் தொடங்​கி​வைத்​தார். நிகழ்ச்​சி​யில் அவர் பேசும்​போது, “பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்​டும் என்று பழனி​சாமி வலி​யுறுத்தி உள்​ளார்” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.