கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் வரும் நவம்​பரில் அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும் என அம்​மாநில முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார்.

கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் வென்​றதை தொடர்ந்து சித்​த​ராமையா முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல்​வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்​கிரஸ் மேலிடம் துணை முதல்​வர் பதவி வழங்​கியது.

முதல்​வ​ராக சித்​த​ராமையா பொறுப்​பேற்று வரும் நவம்​பருடன் இரண்​டரை ஆண்டு நிறைவடைகிறது. எனவே டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என‌ அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். ஆனால் 2028-ம் ஆண்டு வரை தானே முதல்​வ​ராக தொடரப் போவ​தாக சித்​த​ராமையா கூறி​யுள்​ளார்.

இதனிடையே காங்​கிரஸ் மூத்த எல்​எல்​ஏக்​கள் 20-க்​கும் மேற்​பட்​டோர் தங்​களுக்கு அமைச்​சர் பதவி வேண்​டும் என போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யு​மாறு கோரிக்கை வலுத்​துள்​ள​தால் ஆளும் காங்​கிரஸ் அரசுக்கு நெருக்​கடி அதி​கரித்​துள்​ளது.
இந்​நிலை​யில் முதல்​வர் சித்​த​ராமையா பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

அமைச்​சர​வையை மாற்றி அமைக்​கு​மாறு காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் 4 மாதங்​களுக்கு முன்பே என்​னிடம் கூறினர். ஆனால் நான் ஆட்சி பொறுப்​பேற்று இரண்​டரை ஆண்டு நிறைவடைந்த பிறகு அமைச்​சர​வையை மாற்​றலாம் என கூறினேன். வரும் நவம்​பரில் இரண்​டரை ஆண்​டு​கள் நிறைவடைகிறது. எனவே அப்​போது அமைச்​சரவை மாற்றி அமைக்​கப்​படும்.

இதுதொடர்​பாக நவம்​பர் 16-ம் தேதி டெல்லி செல்​கிறேன். அப்​போது காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​து​வேன். அவர்​களது ஆலோ​சனை​யின்​படி அமைச்​சரவை மாற்றி அமைக்​கப்​படும். இவ்​வாறு சித்​த​ராமை​யா கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.