2 மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்த பிரசாந்த் கிஷோருக்கு ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்​தவரும் தேர்​தல் வியூக வகுப்​பாள​ரு​மான பிர​சாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசி​யல் கட்​சியை தொடங்கி உள்​ளார்.

வரும் நவம்​பரில் நடை​பெறவுள்ள பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அவரது கட்சி போட்​டி​யிடு​கிறது. இந்​நிலை​யில், பிர​சாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்​காஹர்) மற்​றும் மேற்கு வங்​கம் (கொல்​கத்​தா) ஆகிய 2 மாநில வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

குறிப்​பாக, மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் பவானிபூர் தொகு​தி​யில் உள்ள திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அலு​வலக முகவரி​யுடன் (கொல்​கத்​தா) கூடிய வாக்​காளர் பட்​டியலில் பிர​சாந்த் கிஷோர் பெயர் இடம்​பெற்​றுள்​ளது.

இது தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் பிர​சாந்த் கிஷோருக்கு நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது. அதில், “மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​தின் 17-வது பிரி​வின்​படி, ஒன்​றுக்​கும் மேற்​பட்ட தொகு​தி​யில் வாக்​காள​ராக பதிவு செய்​து​கொள்ள முடி​யாது.

இந்த விதி​முறையை மீறு​வது, மேற்​கண்ட சட்​டத்​தின் 31-வது பிரி​வின்​படி தண்​டனைக்​குரிய குற்​றம் ஆகும். இது தொடர்​பாக 3 நாட்​களுக்​குள் விளக்​கம் அளிக்க வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.