'என்னாலயே நம்ப முடியல…' – ஆஸியை வீழ்த்தியது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்!

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியாக பேசியவை இங்கே.

Team India
Team India

ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, ”ரொம்பவே பெருமையாக இருக்கிறது. என்னாலயே நம்பவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் எதை எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது. இந்தத் தொடரில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால், செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு சாதகமான ரிசல்ட்டை மட்டுமே கொடுக்கும் வகையிலான பெர்பார்மென்ஸை கொடுக்க வேண்டிய நாள் இது.

நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அணிக்காக எதையும் செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் இருந்தோம். மூன்று போட்டிகளில் வரிசையாக தோற்ற போது எங்களின் திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்பதை உணர்ந்தோம். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் நாங்கள் கடுமையாக சொதப்பினோம். ஜெமிமா ஆடியிருப்பது ஒரு அற்புதமான இன்னிங்ஸ். அவர் எப்போதுமே அணிக்காக பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடக்கூடியவர். கால்குலேட்டிவ்வாக இன்னிங்ஸை கட்டமைக்கக் கூடிய அவர் மீது எங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.

ஜெமிமா
ஜெமிமா

கிட்டத்தட்ட அவரை ஒரு கணிதவியல் நிபுணர் எனக் கூட சொல்லலாம். அவருடன் மகிழ்ந்து பேட்டிங் ஆடினேன். அவரை பார்த்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இந்த ஓவரில் 5 ரன்களை சேர்த்துவிட்டோம். இன்னும் 2 பந்துகள்தான் மீதமிருக்கிறது என எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அதன்மூலம் நம்மையும் ஊக்கப்படுத்திவிடுவார். இப்போதே நாங்கள் இறுதிப்போட்டியை பற்றி பேச தொடங்கிவிட்டோம். இந்த உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ரசிகர்களின் அன்பால் நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்தோம். இந்த தேசமே எங்களுக்கு பின்னால் இருப்பதாக உணர்கிறோம். தொடர்ந்து தோற்ற போது கூட உங்களால் எப்போது வேண்டுமானாலும் கம்பேக் கொடுக்க முடியுமென ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்காக இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.