India vs Australia 3rd T20I: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20ஐ போட்டி நாளை (நவ. 2) ஹோபார்ட் நகரின் பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.45 மணிக்கு நடைபெறும்.
Add Zee News as a Preferred Source
IND vs AUS 3rd T20I: இந்திய அணிக்கு முக்கிய போட்டி
ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. இந்த மூன்றையும் வென்றால் மட்டுமே இந்தியாவால் தொடரை கைப்பற்ற முடியும். குறைந்தபட்சம் 2 போட்டிகளை வென்றால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
IND vs AUS 3rd T20I: இந்திய அணி சொதப்பல்
அந்த வகையில், நாளைய போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். இந்திய அணி சரியான காம்பினேஷனை இந்த போட்டியில் அமைத்தாக வேண்டும். கடந்த போட்டியை பொருத்தவரை இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியது அனைவரும் அறிந்ததே. அதேநேரத்தில், சூழலுக்கு தகுந்தாற்போல் பந்துவீசுவதிலும் இந்திய அணி சொதப்பியிருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
IND vs AUS 3rd T20I: பிளேயிங் லெவனில் மாற்றம் தேவை
இந்திய அணி கடந்த போட்டியில் பவர்பிளேவில் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக பேட்டிங் ஆர்டரில் மாற்றங்களை செய்ததை கூறலாம். அதேபோல், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைத்தது, அர்ஷ்தீப் சிங்கை எடுக்காமல்விட்டது என இந்திய அணி பல தவறுகளை நேற்று செய்திருந்தது. அந்த வகையில், இவற்றை திருத்தி மூன்றாவது டி20ஐ போட்டியில் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை இந்திய அணி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS 3rd T20I: இவர்களுக்கு பதில் இவர்கள்…
இந்நிலையில், குல்தீப் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹர்ஷித் ராணா உங்களுக்கு பேட்டராகவும் கைக்கொடுக்கிறார் எனும்பட்சத்தில் சிவம் தூபேவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் எடுத்து வரலாம். இதன்மூலம், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற ஆப்ஷனும் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்திய அணியில் தற்போது பினிஷிங் ரோலில் அதிரடி காட்ட யாரும் இல்லை. எனவே, சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜித்தேஷ் சர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கலாம்.
ஆனால், இதில் எந்த மாற்றத்தை செய்யாவிட்டாலும், குல்தீப் யாதவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும். அர்ஷ்தீப் சிங் புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் பவர்பிளேவில் முறையே 3 மற்றும் 2 ஓவர்களை வீசலாம். மிடில் ஓவர்களில் ஹர்ஷித் ராணாவை சுழற்பந்துவீச்சாளர்களோடு வீச செய்யலாம். டெத் ஓவர்களில் ராணா, பும்ரா, அர்ஷ்தீப் என சிறப்பாகவும் பந்துவீசலாம். சுழற்பந்துவீச்சு தேவைப்பட்டால் வாஷிங்டன், வேகப்பந்துவீச்சு தேவைப்பட்டால் தூபே ஆகியோரை தேர்வு செய்யலாம்.
IND vs AUS 3rd T20I: இந்திய பிளேயிங் லெவன் (கணிப்பு)
அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் / ஜித்தேஷ் சர்மா, அக்சர் பட்டேல், ஷிவம் தூபே / வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
மேலும் படிக்க | IND vs AUS: இனி ஹேசில்வுட் கிடையாது… ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றம் – ஏன்?
மேலும் படிக்க | 2151 நாள்களுக்கு பின் ஷிவம் தூபேவின் உலக சாதனைக்கு முற்றுப்புள்ளி… என்ன தெரியுமா?
மேலும் படிக்க | IND vs AUS 2nd T20: கம்பீர் செய்த 3 பெரிய தவறுகள்… சூர்யகுமார் யாதவ் உடனே உஷாராகணும்!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More