மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு 

சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறு​தியேற்​றனர்.

மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகி​கள் நாளாக​வும், தமிழ்​நாடு நாளாக​வும் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இதையொட்டி முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து செய்தி வெளி​யிட்​டுள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: ஆழ்ந்த ஆன்​மிகம், கலாச்​சா​ரம் மற்​றும் இலக்​கிய பாரம்​பரியத்தை கொண்ட தமிழகம் உரு​வான தினத்​தில் தமிழக மக்களுக்கு என மனமார்ந்த வாழ்த்​துக்​கள். விவ​சா​யிகள், மீனவர்​,கைவினைஞர்,நெச​வாளர்,தொழில்​முனை​வோர், விஸ்​வகர்​மாக்​கள் தங்​களது திறமைமூலம் தமிழகத்தை புதிய சகாப்​|தத்தை நோக்கி எடுத்துச்செல்​கின்​றனர். தமிழகத்​தின் நிலை​யான வளர்ச்​சிக்கு நம்மை அர்ப்​பணித்​துக் கொள்​வோம்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: நாம் வாழும் தமிழகத்​தின் பல பகு​தி​களை நமக்​காக போராடிப் பெற்​றுத் தந்த மார்​ஷல் நேசமணி, ம.பொ.சி போன்ற எண்​ணற்ற போராளி​களுக்கு எல்​லைப்​போ​ராட்​டத் தியாகி​கள் நாளில் என் வீர​வணக்​கத்தை செலுத்​துகிறேன். போரா​டாவிட்​டால் நமக்கு சொந்​த​மான நிலம்மட்​டுமல்ல, வாக்​குரிமையே கூடபறி​போய்​விடும் என அப்​போதே காட்​டிச் சென்றுள்ள நம் தலை​வர்​கள் வழிகளில் தமிழகத்​தின் உரிமைகளை காப்​போம். தமிழகம் போராடும். தமிழகம் வெல்​லும்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: இந்​நாளை பெரு​விழா​வாக, திரு​விழா​வாக கொண்​டாடப்பட வேண்​டும். தமிழர்​கள் இழந்த உரிமை​களை மீட்​க​வும் உலகத் தமிழர்​கள் யாவரும் இந்​நாளில் உறுதி ஏற்​போம்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: தமிழர்​களின் மொழி, இன, பண்​பாட்டு அரசி​யல் அடை​யாளங்​களை பேணி பாது​காக்​க​வும் உரிமை​களை நிலை​நாட்​ட​வும் உறுதி ஏற்​போம்.

தவெக தலை​வர் விஜய்: தமிழ்​நாடு எனப் பெயர் சூட்​டக் காரண​மானவர்​களின் தியாகங்​களை நினை​வு​கூர்​வோம். மக்​கள் விரோதத் திமுக​விட​மிருந்து மக்​கள் சக்​தி​யின் துணை​யோடு தமிழகத்தை மீட்​போம். இனிய தமிழ்​நாடு நாள் நல்​வாழ்த்​துகள்​.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சாதி, மத,இன வேறு​பாடு​களின்றி தமிழர் என்ற உணர்​வோடு பாடு​பட்டு அனைத்து துறை​களி​லும் தமிழகத்தை முன்​னோடி மாநில​மாக்க உறு​தி​யேற்​போம்.

நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: மூவேந்தர் கொடிகளுடன் எல்லை மீட்​புபோராளிகளுக்கு வணக்கம் செலுத்தி விழா​வாக தமிழ்​நாடுநாளைக் கொண்டாடுவோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.