BB TAMIL 9: இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறியது யார்? – என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

விஜய் டிவியில் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 இல் இன்று வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நாள்.

இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகிய நான்கு பேர் இதுவரை வெளியேறியிருக்கிறார்கள்.

புதிதாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேர் வைல்ட்கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து கலையரசன் எவிக்‌ஷன்
பிக்பாஸ் கலையரசன்

இந்த சூழலில் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.

கானா வினோத், கம்ருதீன், விஜே பார்வதி, கலையரசன் உள்ளிட்டோர் எலிமினேஷனுக்கான பட்டியலில் இருந்தனர். இவர்களில் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் கலையரசன் குறைவான வாக்குகள் பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலை வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.