இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து 

புதுடெல்லி: இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் தெரி​வித்​துள்​ளார்.

தேசிய ஒற்​றுமை தினத்தை ஒட்டி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறிய​தாவது: ஓர் அரசு வலு​வாக இருந்​தால் மட்​டுமே நாடு வளர்ச்சி அடை​யும். அண்மை காலத்​தில் இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் ஆட்​சிகள் மாறின. அந்த நாடு​களில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. பலவீனம், சுயநலம், குழப்​ப​மான அரசால் நாட்டை திறம்பட வழிநடத்த முடி​யாது. ஒரு நாட்​டின் அரசி​யல் அமைப்​பு​கள் வலு​வாக இருக்க வேண்​டும். நாட்டு மக்​கள் அரசி​யல் அமைப்​பு​களை வலுப்​படுத்த வேண்​டும்.

சர்​வா​தி​கார ஆட்​சி​யில் சட்​டங்​கள் வளைக்​கப்​படும், நீதி மறுக்​கப்​படும். மனித உரிமை மீறல்​கள் அதி​கரிக்​கும். ராணுவம், அரசு நிர்​வாகத்​தில் ஊழல்​கள் அதி​கரிக்​கும். உணவு, குடிநீருக்கு தட்​டுப்​பாடு ஏற்​படும். பணவீக்​கம், வரிச்​சுமை அதி​கரிக்​கும். இத்​தகைய ஆட்​சியை எதிர்த்து மக்​கள் போராட தொடங்கி விடு​வார்​கள். ஒரு நாட்​டின் குடிமக்​களுக்கு பல்​வேறு கனவு​கள் இருக்​கும். அந்த கனவு​களை நிறைவேற்​றும் வகை​யில் அரசு செயல்பட வேண்​டும். மக்​களின் தேவை​களை பூர்த்தி செய்​வது ஒவ்​வொரு அரசின் கடமை ஆகும்.

சர்​தார் வல்​லப​பாய் படேல் ஆட்சி நிர்​வாகம் குறித்து நன்கு அறிந்​திருந்​தார். அவரது ஆட்சி நிர்​வாக கொள்​கைகள் இன்​றள​வும் ஏற்​புடைய​தாக உள்​ளன. இந்​தி​யா​வில் பல்​வேறு இனங்​கள், மொழிகள், மதங்​களை சேர்ந்த மக்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களை ஒன்​றிணைத்து வழிநடத்த தேவை​யான கட்​டமைப்​பு​களை சர்​தார் படேல் அன்றே உரு​வாக்​கி​னார். சுதந்​திரத்​துக்​குப் பிறகு 500 பிராந்​தி​யங்​களை அவர் ஒன்​றிணைந்​தார். அவரது தொலைநோக்கு பார்​வை, வழி​காட்​டு​தலால் இந்​தியா அபார வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இவ்​வாறு அஜித்​ தோவல்​ பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.