ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர்

திருமலை: ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்​விஎம்​3-எம்5 என்ற ராக்​கெட் மூலம் சிஎம்​எஸ்​-03 என்ற செயற்​கைக்​கோள் விண்​ணில் ஏவப்பட உள்​ளது.

இந்​நிலை​யில் இதன் மாதிரி செயற்​கைக்​கோளு​டன் இஸ்ரோ தலை​வர் நாராயணன் மற்​றும் இஸ்ரோ விஞ்​ஞானிகள் சிலர் திரு​மலைக்கு வந்து நேற்று விஐபி பிரேக் நேரத்​தில் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தனர். அப்​போது மாதிரி செயற்​கைக்​கோளை ஏழு​மலை​யான் பாதத்​தில் வைத்து வழிபட்​டனர்.

கோயிலுக்கு வெளியே இஸ்ரோ தலை​வர் நாராயணன் பேசும்​போது, “சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள் தகவல் தொழில்​நுட்​பத்​தில் பல புரட்​சிகளை ஏற்​படுத்​தும். இது 4,410 கிலோ எடை கொண்​டது. இந்​திய மண்ணில் இருந்து இது​வரை ஏவப்​பட்ட செயற்​கைக்​கோள்​களில் இதுவே அதிக எடை கொண்​டது” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.