மரபணு மாற்றப்பட்ட பருப்புகளை பயிரிட திட்டம்

புதுடெல்லி: தற்சார்பு இந்​தி​யா​வுக்​கான திட்​டத்​தின் கீழ் அடுத்த 6 ஆண்​டு​களில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகைகளை பயி​ரிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, உளுந்​து, துவரை மற்​றும் மசூர் ஆகிய மூன்று பருப்பு வகை​களின் கீ்ழ் 15 மரபணு திருத்​தப்​பட்ட வகைகளை வெளி​யிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

மத்​திய வேளாண் மற்​றும் விவ​சா​யிகள் நல அமைச்​சகம் சமீபத்​தில் தற்​சார்பு இந்​தி​யா​வுக்​கான செயல்​பாட்டு வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டது. அதில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகை​களின் உரு​வாக்​க​மும் ஒன்​றாகும்.

இந்​தத் திட்​டத்​தின் கீழ் உற்​பத்​தித்​திறனை அதி​கரிக்க குறுகிய கால மற்​றும் கலப்​பின பருப்பு வகைகளு​டன் அதிக மகசூல் தரும் வகைகளை உரு​வாக்​கு​வதற்​கான முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வளர்ந்து வரும் சவால்​களை எதிர்​கொள்ள, காலநிலை-எ​திர்ப்பு மற்​றும் பூச்சி எதிர்ப்பு வகைகளை உரு​வாக்​கம் செய்​வ​தி​லும் கவனம் செலுத்​தப்​படும். பரவலான தத்​தெடுப்பை உறுதி செய்​வதற்​காக, முக்​கிய பருப்பு வகைகளை வளர்க்​கும் மாநிலங்​களில் சோதனை​கள் நடத்​தப்​படும்.

மேலும் நிலை​யான பருப்பு வகை சாகுபடிக்​காக மரபணு-​திருத்​தப்​பட்ட வகை​களின் வளர்ச்​சியை ஆதரிக்க தேவை​யான ஆராய்ச்​சிகள் மேலும் முன்​னெடுக்​கப்​படும் என்று அக்​டோபர் 18 அன்று வெளி​யிடப்​பட்ட வழி​காட்​டு​தல்​களில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.