நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பொது இடங்​களில் திரி​யும் தெரு நாய்​களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்​பகங்​களில் அடைக்குமாறு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தெரு நாய் மேலாண்மை திட்​டங்களை செயல்​படுத்த 4 வாரங்​களுக்​குள்வழி​காட்டு செயல்​முறை​களை உரு​வாக்​கு​மாறு இந்​திய விலங்​கு​கள் நல வாரி​யத்​துக்​கும் உத்​தர​விடப்பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு நாய்​கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. நாடு முழு​வதும் இந்த பிரச்​சினை இருப்​ப​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் கருத்​துகளை பதிவிட்​டனர். இதையடுத்து, உச்ச நீதி​மன்​றமே தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. ‘விலங்​கு​கள் கருத்​தடை விதி​கள் நாடு முழு​வதும் ஒரே மாதிரி​யாக இருக்​கின்​றன.

அதே​போல, தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்​கும் இந்த பிரச்​சினை ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் இருக்க வாய்ப்​பு உள்​ளது.எனவே, இந்த வழக்​கில் மாநிலங்​கள், யூனியன் பிரதேச அரசுகள், கால்​நடை பராமரிப்​பு,உள்​ளாட்சி ஆகிய துறை செயலர்​கள் பதில் அளிக்க வேண்​டும். அத்​துடன் விலங்​கு​கள் கருத்​தடை விதி​களை செயல்​படுத்த எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகளை அறிந்து கொள்ள வேண்​டும்’ என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உத்​தர​விட்​டது.

இந்த வழக்​கில் பல மாநிலங்​கள் பதில் அளித்​தன. பதில் மனு தாக்​கல் செய்​யாத மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படிகடந்த 3-ம் தேதி நேரில் ஆஜராகினர். இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்​றம் நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​களின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தலாக மாறி வரும் தெரு நாய்​கள் பல்வேறு பகுதிகளிலும் குழந்​தைகள், அப்பாவி மக்களை கடித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதை கருத்​தில் கொண்டு கீழ்க்​கண்ட உத்​தர​ வு​கள் பிறப்​பிக்​கப்​படு​கின்​றன.

  • மாநில, தேசிய நெடுஞ்​சாலைகளில் திரி​யும் தெரு நாய், மாடு போன்ற விலங்​கு​களை மாநக​ராட்​சி, நகராட்சி அமைப்​பு​கள், மாநிலங்​களின் சாலைப் போக்​கு​வரத்து துறை, பொதுப்​பணித் துறை ஆகியவை அப்​புறப்​படுத்த வேண்​டும். இதற்​காக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு நெடுஞ்​சாலைகளில் திரி​யும் நாய்​கள், மாடு​களைக் கண்​டறிந்து அவற்​றைப் பிடித்​துக் கொண்​டு​போய் காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும். நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசிபோட வேண்டும். காப்பகங்களில் அடைக்​கப்​படும் நாய்​கள், மாடு​கள் ஆகியவை விலங்​கு​கள் நல பாது​காப்​புச் சட்​டத்​தின்​படி பராமரிக்​கப்பட வேண்​டும்.
  • 24 மணிநேர ரோந்துக் குழு: நெடுஞ்​சாலைகளில் திரி​யும் தெரு நாய், மாடு போன்ற விலங்​கு​களை உள்​ளூர் காவல் துறை, கால்​நடை அலு​வலர்​கள், உள்​ளூர் நிர்​வாகங்​கள் உதவி​யுடன் பிடிக்க, 24 மணி நேர​மும்செயல்​படும் நெடுஞ்​சாலை ரோந்​துக் குழுக்​களை உரு​வாக்க வேண்​டும்.
  • நெடுஞ்​சாலைகளில் பயணிப்​போர் தொடர்பு கொள்ள உதவி எண்​களை அறிவிக்க வேண்​டும். இந்த உத்​தர​வை​களை உறு​தி​யாக நடை​முறைப்​படுத்த தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் தலை​வருடன் அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேச தலை​மைச் செயலர்​கள் ஒருங்​கிணைத்து செயல்பட வேண்​டும். உத்​தர​வு​களை செயல்​படுத்​தாத அதி​காரி​களை இதற்கு பொறுப்​பேற்க வைக்க வேண்​டும்.
  • அனைத்து அரசு, தனி​யார் மருத்​து​வ​மனை​களும் ரேபிஸ் தடுப்​பூசி மருந்​துகளை இருப்​பில் வைக்க வேண்​டும். நாய்க்​கடி, அதற்​கான முதலுதவி உள்​ளிட்​டவை குறித்து மாணவர்​கள், ஊழியர்​களுக்கு அனைத்து பள்​ளி​கள், கல்வி நிறு​வனங்​களும் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும்.
  • விளை​யாட்டு அரங்​கங்​களில் தெரு நாய்​கள் நுழைவதை தடுக்க பாது​காவலர்​களை நியமிக்க நிர்​வாகங்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.
  • ரயில் நிலை​யங்​கள், பேருந்து நிலை​யங்​கள் போன்​றவற்​றில் தெரு நாய்​களின் நடமாட்​டத்தை கட்​டுப்​படுத்​த​வும், தொடர்ந்து ஆய்வு நடத்​த​வும், விலங்​கு​கள் உணவுக் கழிவை தேடி வராமல் இருக்​கும் வகை​யில் திடக்​கழிவு மேலாண்​மையை செயல்​படுத்​த​வும் ரயில்​வே, மாநில போக்​கு​வரத்​துக் கழகங்​கள், நகராட்சி நிர்​வாகங்​களுக்கு உத்​தர​விடப்​படு​கிறது.
  • அரசு, தனி​யார் கல்வி நிறு​வனங்​கள், மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், மருத்​து​வக் கல்​லூரி​கள், விளை​யாட்டு அரங்​கங்​களில் நாய்க்​கடியை தடுப்​பது மற்​றும் தெரு நாய் மேலாண்மை திட்​டங்​களை நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் ஒரே மா​திரி​யாக செயல்​படுத்​தும் வகை​யில் நிலை​யான வழி​காட்டு செயல்​முறை​களை இந்​திய விலங்​கு​கள்​ நல வாரி​யம்​ 4 வாரங்​களுக்​குள்​ உரு​வாக்​கி அறிவிக்​க வேண்​டும்​. இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.