பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல் 

வாஷிங்டன்: ‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’ என்று அமெரிக்​கா​வின் உளவுத் துறை​யான சிஐஏ முன்​னாள் அதி​காரி தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் சிஐஏ அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர் ரிச்​சர்ட் பார்​லோ. இவர் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-ம் ஆண்​டு​களில் பாகிஸ்​தான் அணுசக்தி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. குறிப்​பாக அணுஆ​யுதம் தயாரிப்​ப​தற்கு தேவை​யான யுரேனி​யத்தை கஹுவா அணுசக்தி மையத்​தில் செறிவூட்​டும் நடவடிக்​கை​யில் பாகிஸ்​தான் ஈடு​படு​வ​தாக சந்​தேகம் எழுந்​தது. ஆனால், பாகிஸ்​தான் கைகளில் அணுஆ​யுதம் இருப்​பதை இஸ்​ரேல் உட்பட பல நாடு​கள் விரும்​ப​வில்​லை.

அதனால் இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் இணைந்து கஹுவா மையத்​தின் மீது தாக்​குதல் நடத்​தலாம் என்று பரிசீலிக்​கப்​பட்​டது. அப்​படி பாகிஸ்​தான் அணு ஆராய்ச்சி திட்​டத்தை தடுத்து விட்​டால், உலகின் பல பிரச்​சினை​கள் தீர்ந்து விடும் என்று கருதப்​பட்​டது.
ஆனால், அப்​போதைய இந்​திய பிரதமர் இந்​திரா காந்தி தாக்​குதலுக்கு அனு​மதி வழங்​க​வில்​லை. இது அவமானகர​மானது. கடந்த 1982 முதல் 85-ம் ஆண்டு வரை​யில் நான் அமெரிக்​கா​வின் எந்த அரசு பொறுப்​பிலும் இல்​லை. அந்த கால கட்​டத்​தில்​தான் பாகிஸ்​தானின் அணுசக்தி மையத்​தின் மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிடப்​பட்டு கடைசி​யில் கைவிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஒரு கட்​டத்​தில் எனக்கு ரகசி​யங்​கள் தெரிய வந்​தன. அதைப் பற்றி அப்​போது நான் பேச​வில்​லை. ஏனெனில், அந்​தத் திட்​டம் கைவிடப்​பட்டு விட்​ட​தால் பெரி​தாக பேச எது​வும் இல்​லை. ஆனால், இந்​திரா காந்தி மட்​டும் அனு​மதி அளித்​திருந்​தால், பல பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைத்​திருக்​கும். பாகிஸ்​தான் அணு ஆ​யுதத்தை தயாரித்து விட்​டால், அது ஈரானுக்கு கிடைத்​து​விடும். அதை தடுக்க வேண்​டும் என்​று​தான் இஸ்​ரேல் அப்​போது திட்​ட​மிட்​டது.

மேலும் ஆப்​கானிஸ்​தானில் அப்​போது சோவி​யத் யூனியனுக்கு எதி​ராக நடத்தி வரும் ரகசிய போர் சீர்​குலைந்து விடும் என்று அமெரிக்கா நினைத்​திருக்​கும். அதனால், பாகிஸ்​தான் அணு ஆராய்ச்சி மையத்​தின் தாக்​குதல் நடத்த அப்​போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் கூட கடுமை​யாக எதிர்த்​திருப்​பார். இவ்​வாறு ரிச்​சர்ட் பார்லோ கூறி​யுள்​ளார்.பாகிஸ்​தான் கடந்த 1998-ம் ஆண்டு அணுஆ​யுதத்​தை முதல்​ முறை​யாகப்​ பரிசோதனை செய்​தது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.