வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட், காங்., மதிமுக மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை 

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியல் திருத்தத்தை ரத்து செய்​யக் கோரிமார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், காங்கிரஸ், மதி​முக, மனிதநேயமக்​கள் கட்சி உள்​ளிட்டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள ரிட் மனுக்​கள் இன்று விசா​ரணைக்கு வரு​கின்​றன.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைஅறி​வித்த தேர்​தல் ஆணை​யத்தின் அக். 27-ம் தேதி​யிட்ட அறிக்கை அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை உரிமைகளை​யும், மக்​கள் பிர​தி​நி​தித்துவச்சட்​டத்​தை​யும் மீறு​வதாக உள்​ள​தால், திருத்த நடவடிக்​கைகளுக்கு தடை கோரி திமுக சார்​பில் ஏற்கெனவே மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செயலா​ளர் பி.சண்முகம், மமக சார்பில் எம்​.எச்.ஜவாஹிருல்​லா, மதிமுக பொதுச் செய​லா​ளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை,புதுவை திமுக அமைப்பாளர் ஆர்.சிவா உள்​ளிட்​டோரும் ரிட்மனு தாக்​கல் செய்துள்ளனர்.அனைத்து மனுக்​களை​யும், பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்த்த மனுக்​களு​டன் இணைத்து உச்ச நீதி​மன்​றம் இன்று விசா​ரணை நடத்தவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.