டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு: புல்வாமா மருத்துவர் உமர் முகமதுவின் கைவரிசை

புதுடெல்லி: டெல்​லி​யில் நிகழ்ந்த குண்​டு​வெடிப்பு தீவிர​வாதத் தாக்​குதல் என்​றும் இதன் பின்​னணி​யில் புல்​வாமா மருத்துவர் உமர் முகமது இருந்​ததும் முதல் கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

டெல்​லி​யில் நேற்​று​முன் தினம் மாலை செங்​கோட்டை மெட்ரோ ரயில் நிலை​யம் வாயில் எண் 1 முன் ஹுண்​டாய் ஐ20 கார் வெடித்​துச் சிதறியது. இதுகுறித்து உடனடி​யாக மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் முதல்​கட்ட விசா​ரணையை தொடங்​கின. இதில் டெல்​லி​யில் தீவிர​வாதத் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது எனத் தெரிந்​துள்​ளது.

வெடித்து சிதறிய காரில் சக்​தி​வாய்ந்த டெட்​டனேட்​டர் என்ற வெடிபொருள் இருந்​தது தடய​வியல் ஆய்​வில் தெரிந்​துள்​ளது. இதுகுறித்த அறிக்கை விரை​வில் வெளி​யாகும் என்று தெரி​கிறது. வெடிகுண்டு நிரப்​பிய காரை ஓட்டி வந்​தது தீவிர​வா​தி​யான மருத்துவர் உமர் முகமது என டெல்லி போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

இந்த கார் டெல்லி எல்​லை​யிலுள்ள பதர்​பூர் வழி​யாக காலை 8.04 மணிக்கு நுழைந்​துள்​ளது. டெல்லி செங்​கோட்டை முன்பு மசூ​தி​யின் அரு​கில் மதி​யம் 3.19 முதல் மாலை 6.55 வரை நிறுத்​தப்​பட்​டிருந்​தது. அதன் பிறகு அந்த காரை மெது​வாக ஓட்​டிச் சென்ற மருத்துவர் உமர், 6.55 மணிக்கு போக்​கு​வரத்து சிக்​னல் முன்​பாக வெடிக்க வைத்​துள்​ளார். அப்​போது முகத்தை மறைக்க உமர் முகக் கவசம் அணிந்​திருந்​ததும் தெரிந்​துள்​ளது. காஷ்மீரின் புல்​வா​மாவைச் சேர்ந்த இவரது குடும்​பத்​தாரை போலீ​ஸார் அழைத்து சென்று தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

மேலும், டெல்​லி​யின் முக்​கிய பகு​தி​யில் கூட்​டாளி​கள் 2 பேருடன் சேர்ந்து தாக்​குதல் நடத்த உமர் திட்​ட​மிட்​டுள்​ளார். ஆனால், அன்​றைய தினம் காலை பரீ​தா​பாத்​தில் நடந்த திடீர் சோதனை​யால் தீவிர​வாத தாக்​குதல் கடைசி நேரத்​தில் மாற்​றப்​பட்​டுள்​ளது.

இதனிடையே உமரின் நண்பரான முஜம்மில் பயன்படுத்திய ஷாகீனின் காரில் ஏகே 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. முஜம்மிலின் பரீதாபாத்தின் வாடகை வீட்டில் 2,900 வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து டெல்லி போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.