பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழக, கேரள மாநில பாஜகவுக்கு புது சக்தி: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று இரவு பிஹார் தேர்​தல் வெற்றி விழா கொண்​டாடப்​பட்​டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்​கேற்​றார்.

அவர் பேசி​ய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி மாபெரும் வெற்​றியை பெற்​றிருக்​கிறது. ஒட்​டுமொத்த தேசத்​தின் பார்​வை​யும் பிஹார் மக்​கள் மீது திரும்​பி​யிருக்​கிறது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பொது​மக்​கள் பெருந்​திரளாக திரண்டு வந்து வாக்​களித்​தனர். வளர்ச்​சிக்கு ஆதர​வாக பிஹார் மக்​கள் வாக்​களித்து உள்​ளனர். முந்​தைய தேர்​தல் வரலாற்று சாதனை​கள் தற்​போது உடைக்​கப்​பட்டு உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் பிஹார் மக்​களுக்கு நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன். குறிப்​பாக பெண்​கள், இளைஞர்​கள், விவ​சா​யிகளுக்கு நன்​றியை உரித்​தாக்​கு​கிறேன்.

முதல்​வர் நிதிஷ் குமாரின் சீரிய தலைமை தேர்​தல் வெற்​றிக்கு வழி​வகுத்​தது. கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் மிகக் கடுமை​யாக உழைத்​தனர்.
பிஹாரில் அண்​மை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெற்​றது. இந்த நடை​முறைக்கு ஒத்​துழைப்பு அளித்த மக்​களை பாராட்​டு​கிறேன். அதன்​பிறகு மிக அமை​தி​யாக பேர​வைத் தேர்​தல் நடத்​தப்​பட்டு உள்​ளது. தேர்​தல் அலு​வலர்​கள், பாது​காப்​புப் படை வீரர்​கள் மிகச் சிறப்​பாக பணி​யாற்​றினர். எந்​தவொரு பகு​தி​யிலும் மறு​வாக்​குப்​ப​திவு நடை​பெறவில்​லை.

பிஹார் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது பொய்​கள் பரப்​பப்​பட்​டன. அவற்றை மக்​கள் நம்​ப​வில்​லை. ஜாமீனில் வெளியே நடமாடும் நபர்​களை ஆதரிக்க மாட்​டோம் என்று மக்​கள் திட்​ட​வட்​ட​மாக தீர்ப்​பளித்து உள்​ளனர். தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் பிஹார் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த வளர்ச்​சிப் பயணம் தொடரும்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றி​யால் தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களின் பாஜக தொண்​டர்​களுக்கு புது சக்தி கிடைத்​திருக்​கிறது. பாஜக தொண்​டர்​களால் முடி​யாதது என்று எது​வுமே இல்​லை. அவர்​கள் மனது வைத்​தால் எதை​யும் சாதிப்​பார்​கள்.
பிஹாரில் காட்​டாட்சி ஏற்​படு​வது தடுக்​கப்​பட்டு உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் தற்​போது நடை​பெறும் காட்​டாட்​சியை மக்​கள் அகற்ற வேண்​டும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் மாநில தேர்​தல் வெற்​றி,இந்த மாநிலங்​களி​லும்​ எதிரொலிக்​கும்​ என்​று பிரதமர்​ நரேந்​திர மோடி சுட்​டிக்​ ​காட்​டி உள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.