11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது.

இதுதொடர்​பாக திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலம் தாலுகா முடி​கொண்​டானைச் சேர்ந்த என்​.ராஜசேகரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனு: கடந்த அதி​முக ஆட்​சி​யில் ராம​நாத​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வள்​ளூர், அரியலூர், நாகப்​பட்​டினம், விருதுநகர், திருப்​பூர், கிருஷ்ணகிரி, நீல​கிரி, நாமக்​கல், திண்​டுக்​கல் ஆகிய 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக்கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ​மனை​கள் கட்​டப்​பட்​டன. இதைக் கட்ட மத்​திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்​கி​யுள்​ளன.

முன்​னாள் முதல்​வரும், முன்​னாள் பொதுப்​பணித் துறை அமைச்​சரு​மான பழனி​சாமி​யின் பதவிக்​காலத்​தில் தான் இந்த மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​டன. ஆனால் இவை கட்​டப்​பட்​ட​தில் தேசிய மருத்​துவ ஆணை​ய விதி​​கள் அப்​பட்​ட​மாக மீறப்​பட்டு மத்​திய, மாநில அரசுகள் ஒதுக்​கிய கோடிக்​கணக்​கான தொகை தவறாக பயன்​படுத்​தப்​பட்​டு, முறை​கேடு செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே இந்த முறை​கேடு தொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்​கக் கோரி லஞ்ச ஒழிப்​புத் துறையிடம் கடந்த 2021 ஜூலை 7-ல் புகார் அளித்​தும் நடவடிக்​கை​ இல்​லை. அதையடுத்து கடந்த 2022-ல் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்த வழக்கில் எனது புகார் தொடர்​பாக ஆரம்​பகட்ட விசா​ரணை நடந்து வரு​வ​தாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இந்த முறை​கேடு தொடர்​பாக முன்​னாள் முதல்​வ​ரான பழனி​சாமிக்கு எதி​ராக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க சிபிஐ-க்கு உத்​தர​விட வேண்​டும்.

அதே​போல கடந்த 2023-ம் ஆண்டு மாநில அரசின் ஒப்​புதல் இல்​லாமல் தமிழகத்​தில் நடை​பெறும் முறை​கேடு​கள் குறித்து சிபிஐ நேரடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்​கலாம் என்ற அனு​ம​தியை தமிழக அரசு வாபஸ்பெற்றது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.