கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி. கூட இல்​லாத கட்​சி​யாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் என்​டிஏ (ஐஜத – பாஜக) கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. மெகா கூட்​டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்​கிரஸ்) படு​தோல்வி அடைந்​தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது.

இந்த தோல்வி மாநிலங்​களவை தேர்​தலில் ஆர்​ஜேடிக்கு கடுமை​யான பாதிப்பை ஏற்​படுத்த உள்​ளது. வரும் 2030-ம் ஆண்டு பிஹாரில் அடுத்த சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும். அதற்கு முன்​ன​தாக தற்​போது ஆர்​ஜேடி கட்​சி​யில் உள்ள 5 மாநிலங்​களவை உறுப்​பினர்​களின் பதவிக் கால​மும் முடிந்​து​விடும். அதன்​பிறகு 30 ஆண்டு கட்சி வரலாற்​றில் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி.கூட இல்​லாத கட்​சி​யாக ஆர்​ஜேடி மாறும்.

5 எம்.பி.க்கள்: ஆர்​ஜேடி​யில் தற்​போது மாநிலங்​களவை எம்​.பி.க்​களாக உள்ள பிரேம் சந்த் குப்தா (ஆர்​ஜேடி மாநிலங்​களவை தலை​வர்), ஏ.டி.சிங் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்​ரல் மாதம் முடிகிறது. பையாஸ் அகமது​வின் பதவிக்​காலம் 2028-ம் ஆண்டு ஜூலை​யில் முடிகிறது. மனோஜ் குமார் ஜா, சஞ்​சய் யாதவ் ஆகிய இரு​வரின் பதவிக் காலம் 2030-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் முடிகிறது.

அடுத்த 2026-ம் ஆண்டு பிஹாரில் காலி​யாகும் 5 மாநிலங்​களவை எம்​.பி. பதவிக்கு தேர்​தல் நடை​பெறும். அப்போது ஆர்​ஜேடி 2, ஐஜத 2, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 1 என 5 இடங்​களுக்கு தேர்​தல் நடை​பெறும். இந்த 5 இடங்​களுமே என்​டிஏ கூட்​ட​ணிக்கு செல்​லும். இதன் மூலம் மாநிலங்​களவை​யில் என்​டிஏ கூட்​டணி பலம் பெறும்.

அதே​போல், வரும் 2028-ம் ஆண்டு பாஜக.​வில் 3, ஐஜத மற்​றும் ஆர்​ஜேடி.​யில் தலா ஒரு​வரின் மாநிலங்​களவை எம்​.பி. பதவிக் காலம் முடிகிறது. இந்த 5 இடங்​களும் கூட என்​டிஏ கூட்​ட​ணிக்கே செல்​லும்.

ஒவைசி ஆதரவு: பிஹார் தேர்​தலில் அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளது. இந்​தக் கட்சி வரும் 2030-ம் ஆண்டு நடை​பெறும் மாநிலங்​களவை தேர்​தலில் ஒரு​வேளை ஆதர​வளித்​தால் ஒரு இடத்​தில் மட்​டும் ஆர்​ஜேடி.க்கு மாநிலங்​களவை எம்​.பி. பதவி கிடைக்​கும்.

ஆனால், அதற்கு வாய்ப்​பு​கள் குறை​வாகவே உள்​ளது. ஏனெனில், பிஹார் தேர்​தலில் கூட்​ட​ணி​யில் சேர விரும்​பிய ஒவைசியை தேஜஸ்வி தவிர்த்​து​விட்​டார்​. இதனால்​ ஒவைசி​யின்​ ஆதர​வு கிடைப்​பது கடினம்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.