புதுடெல்லி: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார்.
தற்போது பிஹார் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளன. இண்டியா கூட்டணியில் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க ராகுல் காந்தி இந்தியாவில் இல்லாமல் வேறு எங்கு ஓடி ஒளிந்து கொண்டாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது ராகுல் காந்தி லண்டனில் இருக்கிறாரா அல்லது மஸ்கட் அல்லது மத்திய கிழக்கில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷேர்கில் கூறுகையில், “ராகுல் காந்தி வேறுவொரு நாட்டில் தூங்கி எழுந்திருக்கும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றியிருக்கும்” என்றார்.