தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தேஜஸ்விக்கு மொத்​தம் 1,18,597 வாக்​கு​கள் கிடைத்த நிலை​யில் அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட பாஜகவைச் சேர்ந்த சதீஷ் குமார் யாதவுக்கு 1,04,065 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன.

அதே​நேரம் ஜன் சுராஜ் கட்​சி​யின் வேட்​பாளர் சஞ்​சல் குமார் வெறும் 3,086 வாக்​கு​களை மட்​டுமே பெற்​றார். லாலு பிர​சாத் யாதவ் குடும்​பத்​துக்கு மிக​வும் பாது​காப்​பான கோட்​டை​யாக ரகோபூர் தொகுதி உள்​ளது. இங்கு இவர்​களது குடும்​பத்​தினருக்கு செல்​வாக்கு அதி​கம். அதனால்​தான், கடந்த தேர்​தல்​களில் ராப்ரி தேவி, லாலு பிர​சாத் யாதவ் இந்த தொகு​தி​யில் பலமுறை போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றுள்​ளனர். கடந்த 2015-ம் ஆண்​டிலிருந்து தேஜஸ்வி இத்​தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தொடர்ந்து வெற்​றி​பெற்று வரு​கிறார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

கடந்த 2020-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் தேஜஸ்வி 38,000-க்​கும் அதி​க​மான வாக்​கு​களைப் பெற்று வெற்​றி​பெற்​றார். ஆனால், இந்த முறை வெறும் 14,000 வாக்​கு​களில் மட்​டுமே அவர் வெற்றி சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. இது, தேஜஸ்​வி​யின் செல்​வாக்கு அத்​தொகு​தி​யில் குறைந்து வரு​வதை எடுத்​துக்​காட்​டு​வ​தாக அரசி​யல் திற​னாய்​வாளர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.