பல ஆண்டு கனவு நனவாகிறது: மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

மாமல்லபுரம்: ​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி 4-வது வார்டு பகு​தி​யில் மாதுளங்​குப்​பம் கிராமம் அமைந்​துள்​ளது. இங்​கு, இருளர் மக்​கள் அதி​கள​வில் வசித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் மக்​கள் பணிக்கு செல்​வதற்கு ஏரிக்​கரை மீது அமைக்​கப்​பட்​டுள்ள சாலையை பயன்​படுத்​தி​தான் நகருக்​குள் வந்து செல்ல வேண்​டும். ஆனால், ஏரி​யின் கலங்​கல் பகு​தி​யில் சாலை தாழ்​வாக உள்​ள​தால், மழைக்​காலங்​களில் ஏரி நிரம்பி கலங்​கல் வழி​யாக உபரிநீர் வெளி​யேறும்​போது, குறிப்​பிட்ட பகுதி சாலை நீரில் அடித்து செல்​லப்​படு​கிறது.

அதனால், குறிப்​பிட்ட கலங்​கல் பகு​தி​யில் உயர்​மட்ட பாலம் அமைக்க வேண்​டும் என அப்​பகுதி மக்​கள் பல ஆண்​டு​களாக கோரிக்கை விடுத்து வந்​தநிலை​யில், பாலம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் நகர உள்​கட்​டமைப்பு மேம்​படுத்​தும் திட்​டத்​தில் ரூ.75 லட்​சம் நிதி ஒதுக்​கப்​பட்​டது. இதன்​மூலம், தற்​போது 350 மீட்​டர் நீளத்​துக்கு சிறிய அளவி​லான உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. கட்​டு​மான பணி​கள் வரும் டிசம்​பர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என கூறப்​பட்​டுள்​ளது.

பானு

இதுகுறித்​து, மாதுளங்​குப்​பத்தை சேர்ந்த பானு கூறிய​தாவது: கலங்​கலில் உபரிநீர் வெளி​யேறும்​போது பள்ளி செல்​லும் மாணவ, மாணவி​கள் அப்​பகு​தியை கடந்த செல்​வதற்கு அச்​சப்​பட்டு வீட்​டிலேயே முடங்​கும் நிலை இருந்​தது. தற்​போது, பேரூ​ராட்சி நிர்​வாகம் அப்​பகு​தி​யில் மேம்​பாலம் அமைப்​ப​தற்​கான கட்​டு​மான பணி​களை தொடங்​கி​யிருப்​பது மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.