10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா

பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்​பது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தள தலை​வர்​கள் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார் பாட்​னா​வில் நேற்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினார்.

காலை​யில் தொடங்​கிய இந்த ஆலோ​சனைக் கூட்​டம் பிற்​பகல் வரை நீடித்​தது. இதன்​பிறகு மத்​திய அமைச்​சர் நித்​யானந்த ராய், பாஜக மூத்த தலை​வர்​கள் நிதின் நவீன், கிருஷ்ண குமார் உள்​ளிட்​டோர் முதல்​வர் நிதிஷ் குமாரை சந்​தித்து விரி​வான ஆலோ​சனை நடத்​தினர். இதர கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் அவரை சந்​தித்​துப்பேசினர்.

இன்று ஆளுநருடன் சந்​திப்பு: புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஐக்​கிய ஜனதா தள எம்​எல்​ஏ.க்​களின் கூட்​டம் பாட்​னா​வில் இன்று நடை​பெறுகிறது. இந்த கூட்​டத்​தில் ஐக்​கிய ஜனதா தள சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக நிதிஷ் குமார் தேர்வு செய்​யப்பட உள்​ளார். அதன் ​பிறகு ஆளுநர் ஆரிப் முகமது கானை அவர் சந்​தித்து ராஜி​னாமா கடிதத்தை அளிக்க உள்​ளார். அப்​போது புதி​தாக ஆட்​சி​யமைக்​க​வும் அவர் உரிமை கோரு​வார். வரும் 19-ம் தேதி பிஹாரில் என்​டிஏ அரசு பதவி​யேற்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்​களின் முதல்​வர்​கள் பங்​கேற்க உள்ளனர்.

மத்​திய அமைச்​சர் சிராக் பாஸ்​வான் பாட்​னாவில் நேற்று நிருபர்​களிடம் கூறும்போது, “பிஹாரில் அடுத்த சில நாட்​களில் புதிய அரசு பதவி​யேற்​கும். அமைச்​சர்​கள் யார் என்​பது நவம்​பர் 17-ம் தேதிக்​குள் இறுதி செய்​யப்​படும். இதுதொடர்​பாக பாஜக மூத்த தலை​வர்​ களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறேன்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக பிஹார் அரசி​யல் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வரும் 19 அல்​லது 20-ம் தேதி பாட்​னா​வில் உள்ள காந்தி மைதானத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்பு விழா நடை​பெறும். அப்​போது பிஹார் முதல்​வ​ராக நிதிஷ் குமார் 10-வது முறை​யாக பதவி​யேற்​பார். இதில் எந்த மாற்​ற​மும் இல்​லை. பிஹார் தேர்​தலில் பாஜக 89, ஐக்​கிய ஜனதாதளம் 85, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சி 19, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளன. பிஹார் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கை​யின் அடிப்​படை​யில் 36 பேரை அமைச்​சர்​களாக நியமிக்க முடி​யும்.

புதிய அமைச்​சர்​கள் நியமனம் தொடர்​பாக ஐக்​கிய ஜனதா தளத்​தின் மூத்த தலை​வர்​கள் லல்​லன்சிங், சஞ்​சய் ஜா ஆகியோர் டெல்​லி​யில் முகாமிட்டு உள்​ளனர். பாஜக மூத்த தலை​வர்​கள் அமித் ஷா, தர்​மேந்​திர பிர​தான், வினோத் தாவ்டே உள்​ளிட்​டோரை அவர்​கள் சந்​தித்து முக்​கிய ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். இதில் புதிய அமைச்​சர்​களின் பெயர்​கள் இறுதி செய்​யப்பட உள்​ளது. கடந்த 2023-ம் ஆண்​டில் மத்​திய பிரதேசத்​தில் பாஜக​வின் புதிய அரசு பதவி​யேற்​றது. அப்​போது 17 புதி​ய​வர்​கள் அமைச்​சர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். அதே ஆண்​டில் மத்​திய பிரதேசத்​தில் பாஜக அரசு பதவி​யேற்​றது. அப்​போது 22 புதி​ய​வர்​களுக்கு அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்​டது. இதே பாணியை பின்​பற்றி பிஹாரிலும் பாஜக சார்​பில் புதி​ய​வர்​களுக்கு அமைச்​சர் பத​வி வழங்​கப்​பட வாய்ப்​பு இருக்​கிறது.இவ்​வாறு பிஹார்​ அரசி​யல்​ வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

பாஜகவில் 16 அமைச்சர்கள்: தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 எம்எல்ஏ.க்களுக்கு ஓர் அமைச்சர் என்ற வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி பாஜகவை சேர்ந்த 16 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 14 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். ராஷ்டிரிய
லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். சிறிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவி அளிக்கப்படும்.
பாஜக மூத்த தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் தற்போது துணை முதல்வர்களாக உள்ளனர். இதில் சாம்ராட் சவுத்ரி மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கக் கூடும்.

விஜய் குமார் சின்ஹாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம். பாஜக மூத்த தலைவர்கள் ராம்கிருபாள் யாதவ், மங்கள் பாண்டே, ரஜ்னீஷ் குமார் ஆகியோரில் ஒருவருக்கு புதிதாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பிலும் துணை முதல்வர் பதவி கோரப்படுவதாகத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.