
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவ.17 (நேற்று) முதல் டிச.27-ம் தேதி வரையும், மகரவிளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.