
சூரத்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளனர். இந்த தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கவுரவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குஜராத்தின் நர்மதா மாவட்டம், டெடியாபடா பகுதியில் உள்ள தேவமோக்ரா தேவி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபட்டார். இந்த கோயில் பழங்குடி மக்களின் கோயில் ஆகும்.