
குவாஹாட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது.
அப்போது பேரணியாக சென்றவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பாகல்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து, முஸ்லிம் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் அங்குள்ள காலிபிளவர் தோட்டத்தில் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக இது, “காலி பிளவர் புதைப்பு வழக்கு" என்று அழைக்கப் படுகிறது.