“பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

பிஹார் தேர்தல் முடிவை விமர்சனக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி நேற்று தெரிவித்தார்.

சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்ல, மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த கமல்ஹாசன் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஹார் தேர்தல் முடிவுகளை விமர்சனக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். தமிழகம் கவனமாகவும், விழிப்போடும் இருக்க வேண்டும். மேகேதாட்டு அணை பிரச்சினை நான் சிறு வயதாக இருந்தபோதிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. தற்போது எனது தாடியின் நிறமே மாறி விட்டது. ஆனால், தண்ணீர் கருப்பாகவும், தாடி வெள்ளையாகவும் மாற ஆரம்பித்து விட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.