
வரும் 2026 தமிழக அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும் வாய்ப்பு உருவாகும் என்று பிரேமலதா தெரிவித்தார்.
தேமுதிகவின் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ சுற்றுப் பயணத்தின் 3-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தொடங்கினார். முன்னதாக, மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கூடல்நகரில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: டிச. 28-ல் விஜயகாந்த் குருபூஜையும், ஜன. 9-ல் கடலூரில் கட்சி மாநாடும் நடக்கிறது. தமிழகம் முழுவதும் மற்ற கட்சிகளுக்கு இணையாக பூத் கமிட்டி அமைத்துள்ளோம். தேர்தலுக்கு தயாராகுங்கள். முன்கூட்டியே தேர்தல் வரலாம். எஸ்ஐஆர் குறித்து விமர்சனம் இருந்தாலும், தனக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் வாக்கை தவறவிடாமல் உறுதி செய்யுங்கள்.