ICC T20 World Cup 2026, Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இன்னும் 50 நாள்களுக்கும் குறைவான நாள்களே உள்ளன. இந்தியாவில் சென்னை, மும்பை, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா நகரங்களிலும்; இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களிலும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. டிக்கெட் விற்பனை கூட பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
Add Zee News as a Preferred Source
Team India: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி
இந்திய அணியை பொருத்தவரை குரூப் சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த பிரிவில் அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் உள்ளன. இந்தியா மற்ற 4 அணிகளுடன் தலா 1 முறை மோதும். குரூப் சுற்று முடிவில் இந்தியா முதலிரண்டு இடங்களை பிடித்தால், அடுத்த சூப்பர் 8 சுற்றில் X1 அணியாக கருதப்படும். அந்த வகையில், குரூப் சுற்றில் 4 போட்டிகளையும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மைதானத்தில் விளையாட உள்ளது. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால், அப்போட்டி கொழும்புக்கு மாற்றப்படும்.
Team India: அடுத்த வரும் நியூசிலாந்து தொடர்
அந்த வகையில், நடப்பு சாம்பியன் இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வரும் ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாட இருக்கிறது. மேலும், தற்போதே டி20 உலகக் கோப்பை தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாடை இந்தியா அறிவித்திருக்கிறது. இதே ஸ்குவாட்தான் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் களமிறக்கப்படும் எனலாம். நியூசிலாந்து தொடரிலேயே காம்பினேஷனை கண்டறிந்துவிட்டால், டி20 உலகக் கோப்பையை எளிமையாக தக்கவைக்கலாம். ஆஸ்திரேலியா மட்டுமே இந்தியாவுக்கும் கடும் போட்டியை அளிக்கும் பொதுவாக கூறப்படுகிறது.
Team India: துணை கேப்டன் அறிவிப்பால் வரும் பிரச்னை
இந்தச் சூழலில், இந்திய அணியின் துணை கேப்டன் அறிவிப்பின் மூலம் இந்திய அணியின் காம்பினேஷனில் பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது என்றே சொல்லலாம். இதற்கு முன்னரும் சுப்மான் கில்லை துணை கேப்டனாக அறிவித்து சஞ்சு சாம்சனுக்கு தலைவலியை கொடுத்தது போல், தற்போது அக்சர் பட்டேலை துணை கேப்டனாக அறிவித்து இன்னும் பெரிய தலைவலியை பிசிசிஐ இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறது. துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருவர் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறுவார், அவரை கழட்டிவிடுவது அவ்வளவு எளிதல்ல.
Team India: வாஷிங்டன் சுந்தர் விளையாட வாய்ப்பே இல்லை
இதனால், டி20ஐ உலகக் கோப்பையில் இடதுகை பேட்டர்கள் அதிகம் இருக்கும் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரை கொண்டு வரும் வாய்ப்பு ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஹர்திக் பாண்டியா, தூபே ஆகியோர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். அக்சர் பட்டேலும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார், பினிஷர் ரோலில் ரிங்கு சிங் வந்துவிடுவார் என்பதால் வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை எனலாம். இருவருமே இடதுகை பேட்டர்கள் என்றாலும் வாஷிங்டன் சுந்தர் சமீப காலமாக பேட்டிங்கில் அக்சர் பட்டேலை விட சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
Team India: துணை கேப்டன் கட்டாயம் இல்லை
அக்சர் பட்டேல் திறமையான வீரர் என்பதிலும், அவர்தான் முதன்மையான பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒருவேளை அக்சர் பட்டேல் சொதப்பினால் அவரை மாற்றுவதற்கான வாய்ப்பே தற்போது இல்லாமல் போய்விட்டது என்பதுதான் பிரச்னை. துணை கேப்டனை அறிவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, ஐசிசி விதிகளிலும் அப்படியில்லை. அப்படியிருக்க, பிசிசிஐ ஏன் துணை கேப்டனை அறிவிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதும் புரிவதில்லை.
Team India: ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டப்படுவது ஏன்?
சுப்மான் கில்லை துணை கேப்டனாக நியமித்ததில் ஒரு தொலைநோக்கு திட்டம் இருந்தது. சூர்யகுமாருக்கு பின் கில் என சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நிச்சயம் டி20ஐ கேப்டன்ஸி அக்சர் பட்டேலுக்கு போகாது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா போன்றோரே அடுத்தக்கட்ட டி20ஐ கேப்டன்களாக பார்க்கப்படுவார்கள். மூத்த வீரரை தான் நீங்கள் துணை கேப்டனாக்க வேண்டும் என நினைத்தால் கூட ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமித்திருக்கலாம். அவர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கேப்டன்ஸியிலும் கூட இந்திய அணிக்கு சிறப்பாக பங்காற்றியிருக்கிறார். 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு 10 வெற்றிகளை வென்று கொடுத்திருக்கிறார்.
ஆனால், ஹர்திக் பாண்டியா போன்றோர் ஆளுமை மிக்கவர்கள் என்பதால் அவர்களை துணை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ தயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 2024ஆம் ஆண்டில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு சூர்யகுமார் யாதவ் கைகளுக்குச் சென்றதையும் இங்கு கவனிக்க வேண்டும். காயம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்பதால் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியில் இருந்து ஓரங்கட்டப்படுவது சரியான முடிவல்ல என்பதே ரசிகர்களின் மனநிலையாகவும் இருக்கிறது. ஐபிஎல் தொடரை பொருத்தவரை 2022இல் குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியனாக்கிய ஹர்திக் பாண்டியா, 2023இல் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துவந்தார். ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியில் மும்பை இந்தியன்ஸ் 2024இல் கடுமையாக சொதப்பியது, என்றாலும் 2025 சீசனில் சிறப்பாக விளையாடி 3வது இடத்தில் நிறைவு செய்தது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க | இந்த ஆண்டில் படுமோசம்.. கில்லை நீக்கிய பிசிசிஐ ஏன் சூர்யகுமார் யாதவை நீக்கவில்லை?
மேலும் படிக்க | இந்திய அணியில் ஓய்வை அறிவிக்கப்போகும் வீரர்! டி20 WC தான் கடைசி தொடர்!
மேலும் படிக்க | இந்திய அணியில் இந்த 3 வீரர்கள்… டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார்கள்!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More