மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்கள் மேலே ஏறாதவாறு தடுக்கும் பணியில் போலீஸாரை திரும்ப பெறக் கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழ்நாடு அரசு தீபம் ஏற்ற மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மலைமீது ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மலையின் ஒரு பகுதில் உள்ள தர்காவில் […]