மகளிர் பிரீமியர் லீக்: ஷோபி டேவின் அபாரம்… குஜராத் அணி 209 ரன்கள் குவிப்பு

நவிமும்பை,

நவிமும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இன்று நடைபெற உள்ள 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஷோபி டேவின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அரைசதம் கடந்த அவர் 95 ரன்கள் எடுத்தார். அஸ்லேயிங் கார்டனர் 49 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 209 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் நன்தனி ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.