சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத் திடலில் 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது. இந்த பொன்விழா பொருட்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 49 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில் […]