New Aadhaar App Latest News: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய ஆதார் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜனவரி 29, வியாழக்கிழமை அன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா முன்னிலையில் முறையாக வெளியிடப்பட்டது.
Add Zee News as a Preferred Source
புதிய ஆதார் செயலி
இந்த புதிய செயலி, தற்போதுள்ள ஆதார் செயலியிலிருந்து கணிசமாக வேறுபட்ட அம்சங்களை வழங்குகிறது. இது பயனர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தகவல்களின் மீது அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதையும், சரிபார்ப்பு மற்றும் அங்கீகார செயல்முறைகளை எளிதாக்குவதையும், ப்ரொஃபைல் விவரங்களைப் புதுப்பிப்பது போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் சேவைகளை எளிமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஆதார் செயலி என்பது ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு (ANH) அவர்களின் டிஜிட்டல் அடையாளத்தை எடுத்துச் செல்ல, பகிர, காண்பிக்க மற்றும் சரிபார்க்க ஒரு பாதுகாப்பான, வசதியான மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் வழியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அடுத்த தலைமுறை மொபைல் செயலியாகும்.” என அரசாங்கம் கூறியுள்ளது.
New Aadhaar App: முக்கிய அம்சங்கள்
தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
புதிய ஆதார் செயலியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இது பயனர்கள் முழு ஆதார் அட்டையையும் வெளிப்படுத்தாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பட்ட விவரங்களை மட்டும் பகிர அனுமதிக்கிறது. இது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்கிறது. இதன் மூலம், குறிப்பாக ஹோட்டல்கள் போன்ற இடங்களில், ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது. ஏனெனில், மக்கள் இப்போது தங்கள் அனைத்துத் தரவுகளையும் வெளிப்படுத்தாமல், தங்கள் பெயர் மற்றும் வயது போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டும் தேவைப்படும் இடங்களில் பகிர முடியும்.
எளிய முறையில் அப்டேட் செய்யலாம்
மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், பயனர்கள் இப்போது தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை செயலி மூலமாகவே நேரடியாகப் புதுப்பிக்க முடியும். அதாவது, தொலைபேசி எண்ணை மாற்றுவதற்காக ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. இதேபோல், பயனர்கள் தங்கள் முகவரி விவரங்களையும் செயலி மூலம் புதுப்பிக்கலாம். இதனால் முகவரி மாற்றங்களுக்காக ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை நீக்கப்படுகிறது.
ஆஃப்லைன் ஆதார் வெரிஃபிகேஷன்
புதிய செயலி, பயனர்கள் ஆஃப்லைனில் ஆதார் சரிபார்ப்பு செய்யவும் அனுமதிக்கிறது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் மக்கள் செயலியில் தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க முடியும். இது குறைந்த அல்லது நிலையற்ற இணைய இணைப்பு உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த செயல்முறையை எளிதில் அணுகக்கூடியதாக ஆக்குகிறது.
குடும்ப மேலாண்மை அம்சம்
மற்றொரு முக்கிய புதுப்பிப்பில், புதிய ஆதார் செயலி ஒரு குடும்ப மேலாண்மை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒரு சாதனம் ஐந்து ஆதார் ப்ரொஃபைல்கள் வரை ஆதரித்து நிர்வகிக்க முடியும். இது பயனர்கள் ஒரு மொபைல் போனிலிருந்து ஒரு முழு குடும்பத்திற்கான ஆதார் தொடர்பான புதுப்பிப்புகள் மற்றும் விவரங்களைக் கையாள அனுமதிக்கிறது.
புதிய ஆதார் செயலியைப் பதிவிறக்குவது எப்படி?
புதிய ஆதார் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் ஆகிய இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
— கூகிள் பிளே ஸ்டோர் (ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரைத் திறக்கவும் (iOS பயனர்களுக்கு).
— UIDAI-இன் அதிகாரப்பூர்வமான “ஆதார்” செயலியை சர்ச் செய்யவும்.
— அந்தச் செயலியை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்து நிறுவவும் (இஸ்டால் செய்யவும்).
— உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, செட்-அப் -ஐப் பூர்த்தி செய்யுங்கள்.
— இன்ஸ்டலேஷன் முடிந்ததும், டிஜிட்டல் அடையாள மேலாண்மை, சரிபார்ப்பு, மாற்றங்கள் அல்லது புதுப்பிப்புகளைச் செய்தல் மற்றும் பிற பணிகளுக்காக நீங்கள் அந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
About the Author

Sripriya Sambathkumar
Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs.
She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.
…Read More