சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.31.592 கோடி முதலீட்டில் 46 நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். முதலமைச்சர் ஸ்டாலலின் தலைமையில் நடைபெற்ற 24-வது அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி23ந்தேதி மாலை தலைமைச்செயலகத்தில் […]