டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய AI உச்சி மாநாட்டில் மேலாடையின்றி போராட்டம் நடத்திய விவகாரத்தில் டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல், பிரியங்கா கண்டனம் தெரிவித்து உள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த வாரம் ஏஐ உச்சி மாநாடு ஏப்ரல் 12ந்தேதி தொடங்கி 21ந்தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாடு, மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் […]