'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' – ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.

ஈரான் மீதான தாக்குதல்
ஈரான் மீதான தாக்குதல்

இந்த இடம் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம். அதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கே தாக்குதல் நடத்தியுள்ளன.

அதில் தான் குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “இடிக்கப்பட்ட கட்டிடம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி.

பட்டப்பகலில் மாணவர்கள் இருக்கையில் அங்கே குண்டு வீசப்பட்டது. இந்த இடத்தில் மட்டும் டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.