கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கப்பல் மீது தாக்குதல்
கப்பல் மீது தாக்குதல்

இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார்.

1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார்.

இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.