சென்னை: டாஸ்மாக் பணியாளார்களுக்கு ரூ.1000 சம்பள உயர்வு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இந்த சம்பளம் உயர்வு ஏப்ரல் 1முதல் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் பணிபுரிபவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திற்கு வைத்ததின் பேரில், அவர்களுடைய கோரிக்கைகளை பரீசிலனை செய்து கீழ்க்கண்டவாறு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. அதன்படி டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஏற்கனவே பெறும் ஊதியத்தோடு தற்போது கூடுதலாக ரூ.1000 உயர்த்தி வழங்கப்படுகிறது. […]