சென்னை: மெரினாவில் கடைகள் அமைக்க உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாபியா கும்பல் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் சான்றிதழ் பெற தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அங்கு அதிகரித்து வரும் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் […]