மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது தற்போது தெரியவில்லை என்றும் கூறினார். ஆனால், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். இதற்கிடையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி […]