சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரை கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக எம்.பி. தம்பித்துரை பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதற்காக அவர், அவரது நிலத்தை சுற்றிஉள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும் மடக்கி கட்டிடங்கள் கட்டி உள்ளார். இதை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டுமென திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]