சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள் என்று வாழ்த்து தெரிவித்தார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், […]