ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீண்டும் பரிசீலிக்க நீதிமன்றம் முன்பு கூறியிருந்ததால், நிபுணர் குழு அதைப் பற்றி மறுபரிசீலனை செய்ததாகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தத் தடை அவசியம் என மீண்டும் பரிந்துரைத்ததாகவும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தார். முதன்மை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி […]