திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் இலவச ஏசி பேருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிவலம் செல்ல என்எல்சி நிறுவனம் இலவசமான பேருந்து வழங்கியது. அது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், தற்போது, அண்ணாமலையார் கிரிவலம் செல்ல முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல ஏதுவாக NLC இந்தியா நிறுவனத்தின் சார்பில் முதல் பேருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு ரூபாய் 50 லட்சம் […]