கிரிக்கெட்டில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து, மைதானத்தின் அழுத்தங்களுக்கு நடுவே சரியான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்களின் பங்கும் ஆட்டத்தில் முக்கியமானது தான்.

அம்பயர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது அந்தப் போட்டியின் முடிவையே மாற்றிவிடும். இந்த கிரிக்கெட் அம்பயர்கள் தங்களுடைய பணிக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்று தெரியுமா?
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில், நடுவர்கள் நான்கு நாள் போட்டிக்கு கிட்டத்தட்ட 1.6 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக பெறுகிறார்கள்.
ஐ.பி.எல்- இல் அதிக சம்பளம்
‘அவர்களின் தரம் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து, ஒரு நாள் வருமானம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.
ஐ.பி.எல்- இல் பணியாற்றும் கள நடுவர் ஒரு போட்டிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் பெறுகிறார்.
நான்காவது நடுவர் மற்றும் டிவி/மூன்றாம் நடுவர் தலா 2 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுவர்.

இதில், ஐசிசி-யின் எலைட் பேனலில் உள்ள அனுபவம் வாய்ந்த நடுவர்களுக்கு ஐ.பி.எல்-இல் ஒரு போட்டிக்கு ரூபாய் 3.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
ஒரு ஐ.பி.எல் சீசனில் 12 முதல் 14 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினாலே ஒரு நடுவர் கிட்டத்தட்ட 24 லட்ச ரூபாயில் இருந்து 45 லட்ச ரூபாய் வரை வருமானத்தை ஈட்ட முடியும்.
ஆனால், சர்வதேச டி20 போட்டிகளில் நடுவர்களுக்கான ஊதியம் சற்று குறைவு தான்.
சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான சம்பளம்
ஒரு சர்வதேச டி20 போட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் முதல் 1.25 லட்ச ரூபாய் வரை தான் சம்பளம் வழங்கப்படுகிறது.
சர்வதேச டி20 போட்டிகளுக்கான அவர்களின் ஊதியத்தை ஓப்பிடும் போது ஐ.பி.எல் தொடருக்கு ஊதியம் மிகவும் அதிகம்.
ஐ.பி.எல் நடுவர்களுக்கு ஏன் இவ்வளவு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐ.பி.எல், பெரிய ஒளிபரப்பு ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் ஸ்டேடியங்கள் மூலம் அதிக வருவாயை ஈட்டக்கூடிய ஒரு தொடராக இருக்கிறது.
இதனால், பிசிசிஐ-யால் அதிக அளவில் ஊதியம் வழங்க முடிகிறது.