மனைவி தவறான உறவில் உள்ளார் என்பதை நிரூபிக்க குழந்தைகளின் DNA பரிசோதனை கோர முடியாது என்று ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விவாகரத்து வழக்கின் போது, 59 வயதான கணவன், தனது குழந்தைகள் தன் சொந்த குழந்தைகள் அல்ல என்பதை நிரூபிக்க, இந்திய சாட்சியங்கள் சட்டம், 1872 பிரிவு 45ன் கீழ் DNA பரிசோதனை செய்ய கோரினார். 2024 ஜூலை மாதம் விசாகப்பட்டினம் மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திர […]