சென்னை: தமிழ்நாட்டில், இவிஎம், விவிபாட் வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) மாவட்ட அளவில் இருந்து தொகுதி வாரியாக இணைய குலுக்கல் […]